பதிவு செய்த நாள்
27
ஜூன்
2017
01:06
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பூமிநீளா நாயகி சமேத கரிய பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், வாசுதேவ புண்யாக வாஜனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து, நான்கு கால யாக பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் காலை, 6:00 மணிக்கு புண்யாவாஜனம், தீபாராதனை, யாகசாலையிலிருந்து கும்பங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும், காலை, 8:30 மணிக்கு கரிய பெருமாள், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், கருடாழ்வார், ஆஞ்சநேயர் மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. காலை, 10:30 மணிக்கு மகா அபிஷேகம், காலை, 12:00 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.