பதிவு செய்த நாள்
28
ஜூன்
2017
12:06
கோபி: பாரியூர் வகையறா கோவில் உண்டியல்கள் காணிக்கை, நேற்று எண்ணப்பட்டன. கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்து காளியம்மன் வகையறா கோவில்களின் உண்டியல்கள், நேற்று மதியம் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன. மொத்தம், பத்து உண்டியல்களில் இருந்த காணிக்கைகளை, தனியார் பள்ளி மாணவர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். தங்கம், 46 கிராம், வெள்ளி, 68 கிராம், 5.87 லட்சம் ரொக்கப்பணம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கடந்த மார்ச், 28ல் உண்டியல் திறப்பின்போது, 14.67 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. அதற்குப்பின் பெரியளவில் திருவிழா மற்றும் விசேஷம் நடக்கவில்லை. இதனால் காணிக்கை அதிகரிக்கவில்லை என, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.