பதிவு செய்த நாள்
28
ஜூன்
2017
12:06
திருத்தணி: மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி, முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமையையொட்டி, மூலவர் அம்மனுக்கு, காலையில், 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. பின், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 வரை, ராகுகால பூஜையும் நடந்தது. கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி, மத்துார், புச்சிரெட்டிப் பள்ளி, பொன்பாடி உட்பட அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்து கொண்டு வழிபட்டனர்.