பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், ஆடி மாத முதல் வெள்ளி சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடந்தது. மாரியம்மன் கோவில் கொடிக்கம்பத்தில் உப்புக் கொட்டி, தண்ணீர் ஊற்றி, நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி மாத சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆடி வெள்ளி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடு நடந்தது. பொள்ளாச்சியில் இருந்து மாசாணியம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொள்ளாச்சி கோவை ரோடு மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடந்தது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.