Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரலாற்றின் அடையாளமாக கற்கோவில்! பொள்ளாச்சி கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு பொள்ளாச்சி கோவில்களில் ஆடி வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளி வழிபாடு
எழுத்தின் அளவு:
பழநி அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளி வழிபாடு

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2017
11:07

பழநி, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி, லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து நுாறாயிரம் மலர்கள் துாவி அர்ச்சனை செய்யப்பட்டது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆக.,10 வரை தினசரி மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நுாறாயிரம் மலர்கள் துாவி லட்சார்ச்சனை பூஜைகள் நடக்கிறது. ஆக., 11ல் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடக்க உள்ளது.
நேற்று முதல் ஆடிவெள்ளியை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு பெரிய நாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு மேல் முத்தங்கி அலங்காரம் செய்து லட்சார்ச்சனை நடந்தது.

திருஆவினன்குடி கோயில் துர்கையம்மன் தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயில், வனதுர்க்கை, மகிஷாசூரமர்த்தினி, லட்சுமிபுரம் மகாலட்சுமி, நேதாஜிநகர் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிறப்பு அலங்காரம், பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. வேடசந்துார்: வேடசந்துார் அய்யனார் கோயிலில் துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. 16 வகையான அபிஷேகங்களை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. மலர் அலங்காரத்தில் எழுந்தருளியஅம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கூழ்கலயங்களுடன், பக்தர்களின் ஊர்வலம் நடந்தது. நாகர் சன்னதி வழிபாட்டை தொடர்ந்து, கருவறைக்கு கலயங்கள் அழைப்பு நடந்தது. சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், வாலை, திரிபுரை சக்தி அம்மனுக்கு ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar