பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா மறுபூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக பால்குடம் எடுத்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருக்கண் அபிஷேகம் நடந்தது அம்மன் வெவ்வேறு வாகனங்களில் உலாவந்தார். மபூஜை நேற்று திருவிழா மறுபூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீர்த்ததொட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து நேர்த்திக்கடனுக்காக பால்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.