பதிவு செய்த நாள்
14
ஆக
2017
12:08
திருக்கழுக்குன்றம்: கோரப்பட்டு கிராமத்தில், சப்த கன்னியம்மன் கோவிலில், 108 பால் குட விழா விமரிசையாக நடந்தது. திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கோரப்பட்டு கிராமத்தில், பழமை வாய்ந்த, சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பால் குட விழா விமரிசையாக நடைபெறும்.அதன் படி, நேற்று மங்கள வாத்தியத்துடன், 108 பால்குட ஊர்வலமாக வந்து பின், சப்த கன்னியம்மன் கோவிலை அடைந்தனர். பின், அம்மனுக்கு பால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில், அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.