பதிவு செய்த நாள்
22
ஆக
2017
04:08
பொன்னேரி: தேவி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி, திருவேங்கிடபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணமாரியம்மன் கோவிலில், 29ம் ஆண்டு ஆடித் திருவிழா, கடந்த, 19ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், அம்மனுக்கு மகா அபிஷேகம், கரக ஊர்வலம் வருதல், கூழ்வார்த்தல், வடை பொங்கல் வைத்தல் ஆகிய வைபவங்கள் நடை பெற்றன. மாலை , 7:00 மணிக்கு அலங்கார விளக்குகள் ஜொலிக்க, மங்கள வாத்தியங்களுடன், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவர் சிலை அம்மன், சாஸ்திரி தெரு, அன்னை இந்திரா தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் சேவையும் சிறப்பாக நடந்தது. ஆடித் திருவிழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை வழிபட்டு சென்றனர்.