ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்க குன்றத்து முருகன் செப். 1ல் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2017 10:08
திருப்பரங்குன்றம், மதுரையில் நடக்கும் ஆவணிமூல திருவிழாவில் பாண்டிய ராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றத்திலிருந்து செப். 1ல் புறப்பாடாகிறார். கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு பூஜைகள் முடிந்து, சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டு சர்வ அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் புறப்பாடாகிறார். வழிநெடுகிலும் பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் அருள்பாலித்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றடைவார். அங்கு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சந்திப்பு, வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு நரியை பரியாக்கும் நிகழ்ச்சியில் மதுரை சுவாமிகளுடன் பங்கேற்பார். புட்டுக்கு மண் சுமந்த லீலை, விறகு விற்ற லீலையிலும் சுப்பிரமணிய சுவாமி கலந்து கொள்கிறார். செப். 6ல் பூ பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவார்.