பதிவு செய்த நாள்
14
செப்
2017
10:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா 2ம் நாளில் துலாகட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் காவிரிக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 24ம் தேதி வரை நடைபெறும். புஷ்கரம் விழாவில் தினமு ம் மாலையில் சகஸ்ர நாம அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், காவிரி ஆரத்தி வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது. இரண்டாம் நாள் விழாவான நேற்று மாலை காஞ்சி காமகோடி பீடா திபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் காவிரி துலாக்கட்டம் வடக்குகரைக்கு எழுந்தருளினர்.
துறவியர்கள் காவிரி தெற்கு கரைக்கு எ ழுந்தருளினர். காவிரியின் இருகரைகளிலும சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சங்கராச்சாரியார்கள் முன்னிலையில் வடகரையில் தீட்சதர்களும், தென்கரையி ல் சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் காவிரிக்கு மகா ஆரத்தி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து 1,000க்கும் மேற்பட்ட துறவிய ர்களும், பக்தர்களும் காவிரிக்கு ஆரத்தி எடுத்து வழிபாட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், சூரியனார்கோவில் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ சங்க ரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், புஷ்கரம் கமிட்டி தலைவர் சுவாமி ராமானந்த மகராஜ், ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி மற்றும் விழா குழுவினர் கலந்துகொண்டனர்.