Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தட்சணகாசி காலபைரவர் கோவிலில் ... மயிலாடுதுறையில் காவிரிக்கு மகா ஆரத்தி வழிபாடு மயிலாடுதுறையில் காவிரிக்கு மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை மகா புஷ்கரம் விழா: பக்தர்கள் திதி கொடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2017
06:09

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா நேற்று தொடங்கி வரும் 24ம் தேதி வரை 12 நாட் களுக்கு நடைபெறுகிறது. 2வது நாளான இன்று(செப்13ல்) மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது மூதாரதயர்களுக்கு திதி கொடுத்து, காவிரியில் புனிதநீராடினர்.

Default Image
Next News

தொடர்ந்து அவர்கள் காவிரி தென் கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரி தாயையும், வட கரையில் எழுந்தருளியுள்ள சுவாமி, அம்பாளையும் தரிசனம் செய்தனர். இந்நிலையில் காவிரி துலாக்கட்டத்தில் புனிதநீராட வரும் பக்தர்கள் நீர்தேக்கத்தில் பழைய துணிகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் குப்பைகளை விட்டுசெல்ல வே ண்டாம் என விழாக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். காவிரி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடினர்.  புஷ்கரம் விழாவையொட்டி காவிரி வடக்கு கரையில் 12 நாட்களுக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகிறது.

தோஷங்கள் நீங்கும் நவக்கிரக ஹோமம் நடைபெற்து. சிதம்பரம் தியாகப்பா தீட்சதர் தலைமையில் தீட்சதர்கள் சிறப்பு ஹோமம், பூர்ணாஹுதியாகி, மகா தீபாராதனை செய்யப்பட்டு, கடம் புறப்பட்டு சிதம்பரம் அன்னபூரனி அம்பாள் சமேத அன்ன பூரீஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திகள் காவிரி துலாக்கட்டத்திற்கு எழுந்தருளி காவிரியில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகை கலெக்டர் சுரேஷ்குமார், தனி அலு வலர் வெங்கடேசன், ஆர்.டி.ஓ.காமராஜ், தாசில்தார் காந்திமதி மற்றும் பலர் கலநதுகொணடனர்.
காவிரி மகா புஷ்கரம் விழாவில் தமிழகம் மட்டுமன்றி பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் புனிதநீராடி வருகின்றனர்.

இந்நிலையில் மதியம் பெங்களூரைச் சேர்ந்த சுவாமி சர்வேஸ்வர் தலைமையில் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த லாரன்ஸ், இல்கிசர், கலினா ஆகியோர் அடங்கிய குழுவினர் காவிரி துலாக்கட்டத்திற்கு வந்து காவிரியை வணங்கி, வழிபட்டனர். பின்னர் அவர்கள் அருகில் பிரதிஷ்டை செய்யப்ட்டுள்ள காவிரி தாயையும் வழிபட்டனர். காவிரி மகா புஷ்கரம் விழாவின் 2ம் நாளில் காவிரி துலாக்கட்டத்தை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வுசெய்தார். பின்னர் அவர் கூறுகையில் மகா புஷ்கரம் விழாவையொட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் சிரமமின்றி மகிழ்ச்சியுடன் புஷ்கரத்தில் நீராடி செல்ல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புஷ்கரத்தில் பழைய தண்ணீர் தேங்கி நிற்காமல் வெளியேற்றப்படுவதுடன், இரவில் புதிய தண்ணீர் மாற்றப்படுகிறது. மேலும் மேட்டூரில் திறக்கப்பட்டுள்ள தண்ணர் விரைவில் வந்துவிடும் என தெரிவித்தார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar