உடுமலை: உடுமலை, ஆண்டாள் நாச்சியார் கோவிலில் மகாளய அமாவாசை மற்றும் பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில் அம்மனுக்கு பன்னீர், திருமஞ்சனம், திருநீறு உட்பட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. பக்தர்கள் வெற்றிலை மலை அணிவித்து வழிபட்டனர். அம்மன் திருமஞ்சன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரம் என்பதால் பக்தர்கள் இன்னிசைக்குழுசார்பில் திருவாசகம் முற்றோதல் மற்றும் பாராயணம் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகும்பலாயாகம்: வாளவாடி செல்லும் ரோட்டில், பெரியகுளம் கரையில் அமைந்துள்ள பிரித்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.