திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2017 10:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்வர். புரட்டாசி மாத பவுர்ணமி, நாளை அதிகாலை, 1:35 மணிக்கு துவங்கி, நள்ளிரவு, 12:40 மணி வரை உள்ளது.இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.