Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல ... மீனாட்சி அம்மன் கோயில் தூய்மைப்பணி:ஆண்டுதோறும் ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு மீனாட்சி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,000 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் மீட்டெடுப்பு
எழுத்தின் அளவு:
1,000 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் மீட்டெடுப்பு

பதிவு செய்த நாள்

03 அக்
2017
10:10

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில், மீட்டெடுக்கப் பட்டுள்ளது.சமூகவலைதள உதவிபுதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் பகுதியில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அகத்தீஸ்வரமுடைய விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை மீட்டெடுத்து, சீரமைக்க, வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட சமூக வலைதள நண்பர்கள் கொடுத்த தகவலின்படி, செப்., 29ல், வயலோகம் கிராமத்தில், தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள், இளைஞர்கள், 60 பேர் ஒன்று திரண்டனர்.அவர்கள், சிதைந்த கோவிலை சுற்றி, மண்டிக் கிடந்த புதர்களை சுத்தம் செய்தனர். மூன்று நாட்கள்தொடர்ந்து, மூன்று நாட்கள் மண் மேடு, செடி கொடிகளை அகற்றி, சுத்தம் செய்தனர். அங்கிருந்த கல்வெட்டுகள் மூலம், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதும், மூன்றாம் குலோத்துங்கன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய மன்னர்கள் காலத்தில், திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது. கோபுரம், மடப்பள்ளி என, அனைத்தும் சிதிலமடைந்துள்ளன. அங்கிருந்த இரண்டு சிவலிங்கம், இரண்டு அம்மன் சிலைகள், ஆறு முகங்கள் கொண்ட முருகன் சிலை, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, விநாயகர், நந்தி சிலைகள் சேதமடையும் நிலையில் இருப்பதால், அவற்றை தனியே எடுத்து பாதுகாத்து வருவதாக, பொதுமக்கள் தெரிவித்தனர். நடவடிக்கை வேண்டும்கோவிலை புனரமைக்கவும், அழகிய வேலைப்பாடுடன் கூடிய கற் சிலைகளை பாதுகாக்கவும், இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar