பதிவு செய்த நாள்
12
அக்
2017
11:10
தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் கவுமழை மாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் பக்தர்கள் காவடி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜெயமங்கலம் கவுமழை மாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா நடந்தது. சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நடுப்பட்டி, சிந்துவம்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். பக்தர்கள் காவடி மற்றும் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் அனைத்து வியாபாரிகள் மற்றும் மக்கள் சார்பில், மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க செய்வது பழைய பாடலா, நாட்டுப்புறப்பாடலா, புதிய பாடலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. கோயில் கமிட்டி தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். விழாக்குழு கருப்பையா, ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். பழைய பாடலே என்று பேராயூரணி தாமரைச்செல்வன், கன்னியாகுமரி அரசி, புதிய பாடல்களே என்று மதுரை திருநாவுக்கரசு, நெல்லை கார்த்திகா, நாட்டுப்புறபாடலே என்று கோவை சத்யா, திண்டுக்கல் ராஜீ பேசினர். மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கச் செல்வது நாட்டுப்புற பாடல் என்று நடுவர் முல்லை நடவரசு தீர்ப்பளித்தார்.