பதிவு செய்த நாள்
12
அக்
2017
12:10
தஞ்சாவூர்: சேதுபாவாசத்திரம் அருகே திருடப்பட்ட வெண்கல மாரியம்மன் சிலை, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள ஊமத்தநாட்டில், 100 ஆண்டுகள் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், 56 செ.மீ., உயரம், 25 கிலோ எடையுள்ள மாரியம்மன் வெண்கல சிலை இருந்தது. இதை, செப்., 30 நள்ளிரவு, நான்கு பேர் கொண்ட கும்பல் திருடிச் சென்றது. இதைப் பார்த்த, அருகில் இருந்தவர்கள், நான்கு பேரையும் விரட்டி, மூன்று பேரை பிடித்து, சேதுபாவாசத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட அம்மன் சிலை, சிலைகள் கடத்தல் தொடர்பானவழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நேற்று ஒப்படைக்கப்பட்டது.