சேலத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அம்மாப்பேட்டை பகுதியில், குட்டி பழனி என்றழைக்கப்படும். குன்றின்மீது கோயில் அமைந்துள்ளது. 700 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் கருவறையில் மூலவர் தண்டாயுதபாணி வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். அடிபட்டவர்களுக்கும், விபத்துகளில் சிக்கியவர்களுக்கும் இந்த கோயிலில் திரிசத அர்ச்சனை செய்யப்படுகிறது. அரிச்சி மலர்களை பன்னீரில் கலந்து இந்த அர்ச்சனையைச் செய்கிறார்கள். கோயில், குபேர திசை நோக்கியுள்ளதால் செல்வச் செழிப்புக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் படிபூஜை வழிபாடு செய்யப்படுகிறது.