நாமக்கல்லுக்கு அருகில் உள்ளது. மலைக்குச் செல்லும் வழியில் குறிப்பிட்ட தூரம் வரை தார்சாலை உள்ளது. பின்னர் 131 படிகள் ஏறி கோயிலை அடையலாம். தனி முருகன் கோயில். சற்று சாய்ந்த கருவறை. குடைவரை அமைப்பு. கருவறையில் பாலசுப்பிரமணியன் வள்ளி, தெய்வானை சமேதராய்உள்ளார். நாகாபரணத்துடன் இருப்பது சிறப்பு இதனால் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது ஐதீகம். கோயிலுக்குச் செல்லும் வழியில் கபிலருக்கான சிலையும் உள்ளது. மலையில் சுனை ஒன்றும் உள்ளது. கிருத்திகை, கந்த சஷ்டி விசேஷம்.