விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவர் சென்ற கோகுலம் பூலோக சொர்க்கமாக மாறியது. அவதாரம் நிகழ்ந்து முடிந்த பின் விண்ணுலகம் புறப்பட்ட கி ருஷ்ணர், பசுக்களின் உலகமான கோலோகத்திற்கு சென்றதாகவும், இன்றும் அவர் பிருந்தாவனப் பசுக்களுடன் அங்கு இருப்பதாகவும் சொல்வர். கண்ணன் நிரந் தரமாக வாசம் செய்வதால் இதற்கு நித்ய கோகுலம் என்று பெயர்.பாற்கடலைக் கடைந்தபோது பிறந்த பசுக்களான நந்தை, பத்திரை, சுரபி, சுசிலை, சுமனை என்னும் ஐந்தின் வழித்தோன்றல்கள் இந்த கோலோகத்தில் உள்ளன. அண்ட கோளத்தின் அருகில்உள்ள கோலோகம், கோடி சூரியபிரகாசம் கொண்ட வெண்ணிற உலகமாக உள்ளது என்கிறது புராணத்தகவல்.