சபரிமலை: சபரிமலை நடை திறந்து நான்கு நாட்களில் சபரிமலை வருமானம் 16 கோடி ரூபாயை நெருங்கியது. இது கடந்த ஆண்டை விட 5 கோடி ரூபாய் அதிகம். மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை நவ.,15- மாலை 5:00 மணிக்கு திறந்தது. நான்கு நாட்களின் வருமானத்தை தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது. இதன்படி மொத்த வருமானம் 15 கோடி 91 லட்சத்து 51 ஆயிரத்து 534 ரூபாய். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வருமானம் 10 கோடி 77 லட்சத்து 51 ஆயிரத்து 556 ரூபாய். வருமான விபரம் (ரூபாய்):கடந்த ஆண்டு வருமானம் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப் பட்டுள்ளது. அரவணை விற்பனை 6.74 கோடி (3.88 கோடி), அப்பம் 87.5 லட்சம் (74.42 லட்சம்). காணிக்கை 4.65 கோடி ( 3.69 கோடி), குத்தகை 1.68 கோடி (1.33 கோடி), அபிஷேகம் 12.01 லட்சம் (11.16 லட்சம்).