பம்பையில் 24 மணி நேரமும் இருமுடி : தேவசம்போர்டு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2017 01:11
சபரிமலை: பம்பையில் இருமுடி கட்டுவதற்கு கணபதி கோயில் அருகே 24 மணி நேரமும் வசதி செய்யப்பட்டுள்ளது. சில சூழ்நிலைகளால் வீட்டில் இருந்து இருமுடி கட்டு எடுத்து வர முடியாதவர்களுக்கு, பம்பையில் இருமுடி கட்டுவதற்கு தேவசம்போர்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பம்பை கணபதி கோயில் அருகில் உள்ள தேவசம்போர்டு நிர்வாக அலுவலகத்தில் 250 ரூபாய் செலுத்தி ரசீது பெற்று, கோயில் கட்டுநிறை மண்டபத்தில் அதை காட்ட வேண்டும். அங்கு பம்பா மேல்சாந்தியோ, அவருடன் உள்ள பூஜாரிகளோ நெய்தேங்காய் நிறைத்து இருமுடி கட்டி தலையில் ஏற்றி அனுப்புவர். கூடுதலாக நெய் தேங்காய் வேண்டுமெனில் ஒரு தேங்காய்க்கு 80 ரூபாய் செலுத்த வேண்டும்.ஊரில் இருந்து இருமுடி கட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கொண்டு வந்தால், 150 ரூபாய் மட்டும் செலுத்தி ரசீது பெற்றால் போதுமானது.