திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஞானானந்தா நிகேதனில் திருவாசக முற்றோதல் விழாவில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலுார்‚ ஞானானந்தா நிகேதனில்‚ 7ம் ஆண்டு திருவாசக முற்றோதல் விழா நேற்று காலை 9:00 மணிக்கு ஞானானந்த சத்சங்க மண்டபத்தில் துவங்கியது. நிகேதன் அறக்கட்டளை தலைவர் நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். தபோவனம் சதாசிவகிரி சுவாமிகள்‚ மதுரை சமானந்த சரஸ்வதி சுவாமிகள்‚ தபோவனம் பிரபவானந்த சரஸ்வதி சுவாமிகள்‚ ஆத்மதத்வானந்த சரஸ்வதி சுவாமிகள்‚ அம்ருதேச்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகித்தனர். சிவபெருமான் அம்பிகையுடன் சிறப்பு அலங்காரத்தில் சத்சங்க மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தது. திருச்சி அய்யப்ப நகர் சேக்கிழார் மன்றம்‚ திருச்சி திருவாதவுரார் திருவாசகம் முற்றோதல் குழு‚ மணப்பாறை திருவாசகம் அன்பர் குழு,கிழக்கு தாம்பரம் கற்பக விநாயகர் திருநெறி மன்றம்‚ கீழ் விஷாரம் அப்பர் சுவாமிகள்மட தேவார பயிற்சி மைய மாணவர்கள்‚ கண்டாச்சிபுரம் தமிழ்வேத வார வழிபாட்டு சபை மற்றும் சிவடியார்கள் பலரும் கலந்து கொண்டு திருவாசக முற்றோதல் ஞானபெருவேள்வியை நடத்தினார்கள். நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஞானானந்த நிகேதன் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.