பதிவு செய்த நாள்
11
டிச
2017
12:12
சேலம்: சிவன், முருகன் கோவில்களில், சிறப்பு அபி?ஷக பூஜையில், திரளான பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.
மகா கால பைரவாஷ்டமியை முன்னிட்டு, சேலம், சுகவனேஸ்வரர் கோவில், காலபைரவர் சன்னதியில், நேற்று காலை முதல், சிறப்பு அபிஷேகம், ஹோமம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துமலை முருகன் கோவிலில் உள்ள, சக்ர மகா காலபைரவருக்கு, திரளான பக்தர்கள், வெண் பூசணிக்காயில் தீபமேற்றி வழிபட்டனர். அதேபோல், சேலம் மாநகரில் உள்ள சிவன், முருகன் கோவில்களில் உள்ள, காலபைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜை நடந்தது.
* உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு, நேற்று காலை, சிறப்பு யாக பூஜை நடந்தது. மாலை, யாகத்தில் வைக்கப்பட்ட புனிதநீரால் அபி?ஷகம் செய்து, இரவு சிறப்பு வெள்ளி கவசம் மற்றும் வடைமாலை அலங்காரத்தில், சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் சிவாச்சாரியார்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
* தலைவாசல், ஆறகளூரில் உள்ள, காமநாதீஸ்வரர் ஆலயத்தில், நேற்று அதிகாலை முதலே, பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றால், பைரவர், மூலவர் காமநாதீஸ்வரருக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, தீபமேற்றி பக்தர்கள் வழிபட்டனர். இங்குள்ள எட்டு பைரவர்களுக்கும், தனித்தனியாக சிறப்பு வழிபாடு நடந்தது. காமநாதீஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோர், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். மதியம், சிறப்பு யாகம் நடந்தது. மகா தீபாராதனையில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆத்தூர், கைலாசநாதர் கோவில், உலக நன்மை வேண்டி, சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது. பிரித்தியங்கிரா தேவி, சொர்ண பைரவர், வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், சங்ககிரி சோமேஸ்வரர், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர், பேளூர் கரடிப்பட்டி கருணாகரேஸ்வரர் கோவிலில்களில் சிறப்பு பூஜை நடந்தது.