ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காசி மடம் ஜெகத்குரு சுவாமிகள் தரிசனம் செய்து, உலக அமைதிக்காக 30 நாள்கள் மவுன விரதம் மேற்கொண்டார். நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த காசி மடத்தின் ஜெகத்குரு ஸ்ரீராம்நரேஷ்சாரியார் சுவாமியை, ராமேஸ்வரம் பஜ்ரங்கதாஸ் பாபா சேவா மடம் நிர்வாகி சீதாராம்தாஸ்பாபா, பா.ஜ. மாவட்ட தலைவர் முரளீதரன் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின் சுவாமி அம்மன் சன்னதியில் கங்கோத்திரியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை காசி சுவாமிகள் வழங்கியதும், கோயில் குருக்கள் மந்திரம் முழங்க சிறப்பு கங்கை நீரில் சுவாமி, அம்மனுக்கு அபிேஷகம், பூஜை செய்தனர். பின் கோயில் சார்பில் காசி சுவாமிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து உலக அமைதிக்காக ராமேஸ்வரத்தில் பஜ்ரங்கதாஸ் பாபா மடத்தில் காசி சுவாமிகள், 30 நாள்கள் மவுன விரதத்தை நேற்று துவக்கினார்.
இதுகுறித்து ராமேஸ்வரம் சீதாராம்தாஸ் பாபா கூறுகையில்:உலக அமைதிக்காக 12 ஜோதிர்லிங்க தலத்தில் ஓராண்டில் 30 நாள்கள் மட்டும் காசி ஜெகத்குரு சுவாமிகள், மவுன விரதம் இருப்பது வழக்கம்.இந்தாண்டில் ராமேஸ்வரம் சிவாலயத்தில் தரிசனம் செய்து நேற்று முதல் மவுன விரதம் மேற்கொண்டார். இவர் இடைவிடாமல் 30 நாள்கள் விரதம் இருப்பதால், பக்தர்கள் யாரையும் சந்திக்க மாட்டார். தனியறையில் சூரிய நமஸ்கார பூஜை, தியானம் செய்து தரையில் ஓய்வெடுப்பார் என தெரிவித்தார்.