பதிவு செய்த நாள்
12
ஜன
2018
11:01
உடுமலை:உடுமலை அருகே குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உடுமலை அருகே. குறிஞ்சேரியில், ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவை பாசுரங்கள் சேவை நடக்கிறது. கூடாரை வெல்லும் திருநாளான நேற்று, ரங்கமன்னார், ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று முன்தினம், கிராம விநாயகர் கோவிலிலிருந்து, ரங்கமன்னார் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு கோ பூஜையுடன் துவங்கியது. காலை, 8:30 மணிக்கு பாராயணம் செய்து கலச பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு, சுதர்சன ேஹாமம் மற்றும் உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை, 11 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த, ரங்கமன்னார் உற்சவ மூர்த்திக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் வேத பாராயணங்களுடன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, மகாதீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று, திருகல்யாண வைபவத்தை கண்டு மகிழ்ந்தனர்.