பதிவு செய்த நாள்
12
ஜன
2018
12:01
உடுமலை: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், நேற்று திரண்ட ஐயப்ப பக்தர்கள், பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர். உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ளது. இதனால், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வர். குறிப்பாக, பஞ்சலிங்க அருவியில் குளித்தும், அமணலிங்கேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். தற்போது, சபரிமலை சீசன் என்பதால், அதிகப்படியான ஐயப்ப பக்தர்களும், திருமூர்த்திமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: சபரிமலை சீசன் மற்றும் தைப்பூசத்தையொட்டி, ஜன., மாதத்தில், திருமூர்த்திமலையில், கூட்டம் அதிகம் இருக்கும். அதேபோல், பொங்கலையொட்டி, அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிய வாய்ப்புள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், பார்க்கிங் வசதி செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது. உயிரிழப்புகளை தடுக்க, அணைப்பகுதியில், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் இருப்பதால், நீர்வரத்தை பொறுத்து, பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு, கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.