பதிவு செய்த நாள்
13
பிப்
2018
01:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், சகோதரி நிவேதிதையின் ரதம், கிரிவலம் சென்றது. சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதையின், 150வது ஜெயந்தியையொட்டி, கோவையில், கடந்த ஜன., 22ல் ரத யாத்திரை துவங்கியது. இந்த ரதம் நேற்று திருவண்ணாமலை வந்தடைந்தது. பின், 14 கி.மீ தூரம் கிரிவலம் சென்று, மாட வீதி வலம் வந்து, ராஜகோபுரம் முன் வந்தது. பின் அங்கிருந்து வேலூருக்கு புறப்பட்டு சென்றது. இதில் கலெக்டர் கந்தசாமி, ரத யாத்தரை ஒருங்கிணைப்பாளர் சுவாமி யுக்தேஸ்வரானந்தா, வரவேற்பு குழு தலைவர் தேவராஜன், உட்பட பலர் பங்கேற்றனர்.