Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரியக்குடி திருவேங்கடமுடையான் ... சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி உண்டியலில் ரூ.25 கோடி செல்லாத நோட்டுகள்
எழுத்தின் அளவு:
திருப்பதி உண்டியலில் ரூ.25 கோடி செல்லாத நோட்டுகள்

பதிவு செய்த நாள்

16 மார்
2018
12:03

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி, திருமலையில், ஏழுமலையான் கோவில் உள்ளது. நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். தினமும், கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் வசூலாக கிடைக்கிறது. இந்த தொகை, உடனுக்குடன், வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான, 2016 நவ., 8க்கு பின், பக்தர்கள், உண்டியலில் காணிக்கையாக செலுத்திய, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், தேவஸ்தானத்தின் சார்பில் தனியாக வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான, செல்லாத ரூபாய் நோட்டுகள், தேவஸ்தானத்தின் கைவசம் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், பக்தர்கள், உண்டியலில் செலுத்திய, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை தனியாக பராமரித்து வருகிறோம். 25 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் உள்ளன.

பக்தர்கள், காணிக்கையாக செலுத்திய இந்த நோட்டுகளை, வங்கியில் செலுத்தி, செல்லத்தக்க தொகையாக மாற்ற அனுமதிக்கும் படி, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளோம்.பக்தர்கள், தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றும் வகையில் செலுத்திய தொகை என்பதால், இதை, செல்லத்தக்கவையாக மாற்ற, ரிசர்வ் வங்கி அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரே நாளில் ரூ.4 கோடி: ஏழுமலையான் கோவிலில், நேற்று முன்தினம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில், ஒரே நாளில், நான்கு கோடி ரூபாய் கிடைத்துள்ளது. வியாபார நிறுவன உரிமையாளர்கள், தங்களுக்கு கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை, ஏழுமலையான் உண்டியலில் செலுத்தி வருவதால், முழு ஆண்டு கணக்கு முடிவின் போது, ஆண்டுதோறும் மார்ச்சில், உண்டியல் காணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar