ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2018 11:03
ராமநாதபுரம், ராமநாதபுரம் வழி விடுமுருகன் கோயில் பங்குனி உத்திரத்திருவிழா காப்புகட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. வழி விடு முருகன் கோயிலில் நேற்று காலை 6:30 மணிக்கு சுவாமி முருகப்பெருமானுக்கும், கொடி மரத்திற்கும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது.
பின் சுவாமிக்கு காப்பு கட்டுதல் , கொடியேற்றம் நிகழச்சியும் நடந்தது. தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு பரத நாட்டியம், மெல்லிசை, பக்தி இன்னிசை நிகழச்சியும் நடந்தது. தினமும் திருவிழா நாட்களில் இரவு 8:30 மணிக்கு சண்முகர் அர்ச்சனை நடக்கிறது. மார்ச் 31 வரை நடக்கும் விழாவில் தினசரி இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மார்ச் 30 ல் சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு நொச்சிவயல் ஊரணிக்கரையில் உள்ள பிரம்மபுரிஸ்வர் கோயில் வந்து சேருதல்.காலை 10:30 மணிக்கு மேல் பால்குடம், பால்காவடி எடுத்து புறப்பட்டு மதியம் 12:30 மணிக்கு கோயில் வந்து சேர்தல், பின் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடக்கும். இரவு 7:30 மணிக்கு மேல் பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.