பதிவு செய்த நாள்
24
மார்
2018
09:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர கல்யாண உற்சவம் வரும், 30ல், நடக்கவுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 30, மதியம், 12:00 மணி முதல், 1:00 மணிக்குள் அருணாசலேஸ்வரர் கோவில் சன்னதியில், சுவாமிக்கும், அம்மனுக்கும் கல்யாண உற்சவம் நடக்கும். அன்று மாலை, கொடி மரம் முன்புறம், சுவாமி எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடக்கும். இரவு, 11:00 மணிக்கு கல்யாண மண்டபத்தில் உற்சவம் நடைபெறும்.
தொடர்ந்து நள்ளிரவு, 12:00 மணியளவில் தங்க ரிஷப வாகனத்தில், சுவாமி மாட வீதியுலா நடைபெறும். மறுநாள், கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகபடி, ஏப்.,1ல், நலங்கு உற்சவம், 2 மற்றும், 3ல், ஊஞ்சல் உற்சவம் நடக்கும். விழா நிறைவாக ஏப்., 4, மதியம், 12:00 மணிக்கு தாமரை குளத்தில், பாலிகைவிடுதல் நிகழ்ச்சி, குமரகோவிலில் மண்டகபடி நடக்கவுள்ளது. அன்று இரவு இன்னிசை கச்சேரி, வாண வேடிக்கை நிகழ்ச்சியுடன், சுவாமி வீதியுலா நடக்கும்.