சீர்காழி சட்டைநாதர் கோயில் பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2018 03:04
மயிலாடுதுறை: சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோயில் சித்திரை பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகை மாவட்டம் சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் சிவபெருமான் பிரமபுரீசுவரர், தோணியப்பர் மற்றும் சட்டை நாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இங்கு அஷ்ட பைரவர்கள் ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெரும் பிரமோற்சவ வி ழாவின் 2ம் நாள் திருமுலைப்பால் விழா நடைபெறுவது வழக்கம். சிறப்பு வாய்ந்த சித்திரை பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை மு ன்னிட்டு கோயில் மண்டபத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வினாயகர், முருகன், முத்துச்சட்டைநாதர், ஸ்ரீ திருநிலைநாயகி அம்பாள் உடனா கிய ஸ்ரீ பிரமபுரீசுவரர் பல்லக்கில் வந்து மண்டபத்தில் எழுந்தருள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட ரிஷ பக்கொடி, ஓதுவார்கள் தேவாரம் இசைக்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை ராமு குருக்கள் தலைமையி லானோர் செய்துவைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை கோயில் சு+ப்பிரண்டு செந்தில் செய்திருந்தார். முக்கிய திருவிழாவான திருமுலைப்பால் விழா நாளை மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது.