பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
02:04
ஆர்.கே.பேட்டை : செல்லாத்தம்மன் கோவிலில், மண்டலாபிஷேகம் நிறைவு பெறுவதை ஒட்டி, 108 பால்குடம் ஊர்வலம், இன்று நடைபெற உள்ளது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகமும் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, அமுதாரெட்டி கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ளது, செல்லாத்தம்மன் கோவில். இந்த கோவில் கும்பாபிஷேகம், கடந்த மாதம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்து வருகிறது.இந்த மண்டலாபிஷேகம், இன்று நிறைவு பெறுவதை ஒட்டி, காலை, 8:00 மணிக்கு, 108 பால்குடங்களை, பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர். தொடர்ந்து, 108 சங்காபிஷேகமும் நடைபெற உள்ளது.மாலை, 7:00 மணிக்கு, செல்லாத்தம்மன், மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருள உள்ளார். மண்டலாபிஷேகத்தை ஒட்டி, நேற்று இரவு, கோவில் வளாகத்தில், பக்தி நாடகம் நடத்தப்பட்டது.