பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
03:04
திருப்பத்துார்: வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அருகே, ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ளது ஏழு அருவி. மலை மீது, முருகன் கோவில் உள்ளது. நேற்று காலை, ஏழு அருவியில் இருந்து, தண்ணீர் எடுக்க, கோவில் பூசாரி ராஜா வந்தார்.அப்போது, அருவி நீர் விழும் இடத்தில், 2.5 அடி உயரமுள்ள, ஐம்பொன்னாலான, கையில் வீணையுடன் கூடிய சரஸ்வதி சிலை, பாதி புதைந்த நிலையில் இருந்தது.கிராம மக்கள் உதவியுடன், கிலையை மீட்ட பூசாரி, கோவிலில் வைத்து, பூஜைகள் செய்தார். திருப்பத்துார் வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர்.