சேலம் : சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது. சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கு, காலில் புண் ஏற்பட்டு, 2013 முதல், கோரிமேட்டிலுள்ள, மாந்தோப்பில் தனி இடத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய யானை ராஜேஸ்வரிக்கு பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்கும் படி விலங்குகள் ஆர்வலர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், யானையை கருணைக் கொலை செய்ய அனுமதி அளித்தது. இதனையடுத்து, யானை ராஜேஸ்வரியின் மருத்துவ பரிசோதனையை தமிழக அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. யானையை கருணைக் கொலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது.