உழைப்பைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2018 04:06
● வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடவும் விரும்பாதிருக்கட்டும். ● உழைப்பாளி அவமானப்படத் தேவையில்லை. ● உண்மையில் அறுவடை செய்ய வேண்டியதோ ஏராளமாயிருக்கிறது. ஆனால், வேலையாட்களோ வெகுசிலர் தான் இருக்கிறார்கள். (பணிகள் ஏராளமாக இருந்தும் வேலை செய்ய யாரும் விரும்புவதில்லை என்பது பொருள்) ● உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக. ● உழைக்கும் குடியானவனே விளைச்சல் கனிகளில் முதல்பங்கு பெற வேண்டும். ● போரடிக்கிற மாட்டிற்கு வாயைக் கட்டாதே. (உழைப்பவர்க்கு சரியான கூலி கொடுங்கள் என்பது பொருள்)