பதிவு செய்த நாள்
21
ஜூன்
2018
12:06
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் உண்டியலில், 26 நாட்களில், 1.02 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். மேலும், பக்தர்கள் தங்களது காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். 26 நாட்களில், பக்தர்கள் அளித்த காணிக்கையை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. பின், மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களால் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து எண்ணப்பட்டது. இதில், 1.02 கோடி ரூபாயும், 882 கிராம் தங்கம், 5,075 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.