பதிவு செய்த நாள்
22
ஜூன்
2018
11:06
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் காணிக்கை உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல்களையும் இந்து அறநிலையத் துறை கடலுார் உதவி ஆணையர் ரேணுகாதேவி முன்னிலையில் கோவில் நிர்வாக அலுவலர் முருகன் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, சிதம்பரம் சரக ஆய்வாளர்கள் ராமநாதன், கோவில் அலுவலர்கள் வாசு, ராஜ்குமார், முத்துக்குமரன் ஊழியர்கள் மற்றும் கடலுார் சுயஉதவிக்குழு பெண்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் 14 லட்சத்து 39 ஆயிரத்து 140 ரூபாய், தங்கம் 28 கிராம், வெள்ளி பொருள்கள் 190 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் அமெரிக்கா டாலர் 10, ஆஸ்திரிலியா டாலர் 30, மலேசியா ரிங்கட் 18, சவுதி ரியால் 5, அரபு எமிரேட் ரியால் 5, கத்தார் ரியால் ஒன்று என 40 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கை இருந்தன.