பதிவு செய்த நாள்
22
ஜூன்
2018
12:06
திருக்காரணி : கடம்பத்துார் ஒன்றியம், திருக்காரணி கிராமத்தில் உள்ளது சீனிவாச பெருமாள் கோவில். இந்த கோவிலில், மகா சம்ப்ரோக்ஷணம், இன்று, காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது.நேற்றுமுன்தினம், காலை, 7:00 மணிக்கு, கோ பூஜையும், இரவு, 8:00 மணிக்கு, சயனாதி வாசமும், நடந்தது.மகா சம்ப்ரோக்ஷண நாளான, இன்று, காலை, 9:45 மணிக்கு கலச புறப்பாடும், 10:00 மணிக்கு கோபுர விமானங்களுக்கு, மகா சம்ப்ரோக்ஷணமும் நடைபெறும்.பின், இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம், நடைபெறும்.