மேலச்சேரி பச்சையம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2018 01:07
செஞ்சி: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மேலச்சேரி பச்சையம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கானவர்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். செஞ்சி அருகே அடர்ந்த காட்டின் நடுவே உள்ள, ஆயிரம் ஆண்டுகள் பழமையான பச்சையம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் நடந்தது. இதை முன்னிட்டு சொக்கநாதர், மீனாட்சியம்மன், மன்னார்சாமி, பச்சையம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்தனர். பச்சையம்மனை குலதெய்வமாக கொண்ட ஆயிரக்கணக்கானவர்கள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்தனர். இவர்கள் பொங்கல் வைத்து வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். ஆடு, கோழி பலிகொடுத்து குழந்தைகளுக்கு மொட்டையடித்து, காது குத்தினர். இங்குள்ள பிரம்மாண்டமான சப்த முனிகளுக்கும் சிறப்பு படையலிட்டு வழிபட்டனர். பக்தர்களின் வருகையை ஒட்டி வனத்துறையினரும், செஞ்சி போலீசாரும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுளை செய்திருந்தனர்.