விநாயகருக்குரிய ஸ்லோகம் ஒன்றில், அப்பாவின் தாத்தா கிடையாது என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. ‘மஹஸ் தத் அபிதாமஹம்’ என்கிறது அந்த ஸ்லோகம். ‘மஹஸ் தத்’ என்பது விநாயகரைக் குறிக்கும். ‘ஒளிமயமானவர்’ என்பது இதன் பொருள். ‘அபிதாமஹம்’ என்றால் ‘அப்பாவின் தாத்தா இல்லாதவர்’ என்பது பொருள். சிவன் அநாதியாகத் தோன்றிய சுயம்புமூர்த்தி என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.