பதிவு செய்த நாள்
21
ஆக
2018
11:08
பொன்னேரி: தேவி கிருஷ்ணமாரிஅம்மன் கோவிலில் ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி, திருவேங்கிடபுரம் பகுதியில் உள்ள தேவி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில், 30ம் ஆண்டு ஆடித் திருவிழா, 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், அம்மனுக்கு மஹா அபிஷேகம், கரகம் ஊர்வலம் வருதல், கூழ்வார்த்தல், வாடை பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெற்றன.மாலை, 7:00 மணிக்கு அலங்கார விளக்குகள் ஜொலிக்க, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவர் தேவி கருமாரியம்மன் அம்மன், வாண வேடிக்கைகளுடன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 9:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடந்தது. ஆடித் திருவிழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை நெஞ்சுருக வழிபட்டு சென்றனர்.