பதிவு செய்த நாள்
28
ஆக
2018
03:08
திருப்பூர்: திருப்பூர், முத்தணம்பாளையம் - செவந்தாம்பாளையம் ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவில், கும்பாபிஷேக விழா, 30ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீகணபதி ேஹாமும், நவக்கிரக ேஹாமம், தனபூஜை, கோ பூஜை, தீபாராதனையுடன், விழா இன்று துவங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் துவங்கி, முதல் கால யாகபூஜைகள் நடக்கின்றன. நாளை (29ம் தேதி), காலை, 9:00 மணிக்கு, 2ம் கால யாகபூஜை, காலை, 11:00 மணிக்கு கோபுரகலசம் வைக்கும் நிகழ்ச்சி, 3ம் கால யாகபூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், நடைபெறுகிறது. வரும், 30ம் தேதி காலை, நான்காம்கால யாகபூஜையை தொடர்ந்து, காலை, 8:00 மணி முதல், 8:15 மணிக்குள், ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் விமானத்துக்கும், காலை, 8:15 முதல், 8:30 மணிக்குள், செல்வ விநாயகருக்கும் கும்பாபி ஷேகம் நடக்கிறது. காலை, 8:30 மணி முதல், 9:00 மணிக்குள், மாகாளியம்மன், மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்திற்கும், காலை, 9:00 மணி முதல், 9:15 மணிக்குள், அம்மன்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 30ம் தேதி காலை, 9:00 மணி முதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வள்ளி கும்மி, ஒயிலாட்டம் என கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.