களி மண்ணால் ஆன சிலைகளை மட்டுமே பிரதிஷ்டை செய்யணும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2018 03:08
பேரூர்;கோவை, பேரூர் மற்றும் ஆலாந்துறையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது குறித்து, இந்து அமைப்பினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், பேரூர் டி.எஸ்.பி., வேல்முருகன் பேசியதாவது:எளிதில் தீப்படிக்கும் பொருட்களை கொண்டு கூரை அமைக்க கூடாது. சிமென்ட், தகர சீட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதலுதவி உபகரணங்கள், மருத்துவ வசதிகள் செய்திருக்க வேண்டும். பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள், களிமண்ணால் வடிவமைக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். சிலைகள் பத்து அடி உயரத்துக்கும், அதற்கு குறைவானதாகவும் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.