பதிவு செய்த நாள்
30
ஆக
2018
01:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஆடிப்பூரம், 13ம் தேதி நடந்தது. பக்தர்கள் தங்களது வேண்டுதலை உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட் களை காணிக்கையாக செலுத்தினர்.கோவில் தக்கார் ஜெய்சங்கர் முன்னிலையில், நேற்று காலை, உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் எண்ணினர். இதில், ஆடிப்பூரம்உட்பட, 18 நாட்களில், 55.49 லட்சம் ரூபாய் ரொக்கம், 424 கிராம் தங்கம், 4,980 கிராம் வெள்ளி ஆகியவை, பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திஇருந்தனர்.