* தீமை செய்தவருக்கு நன்மை செய்வதே உத்தமர் வழக்கம். * உண்மையோடும், அன்போடும் வாழ்வது தான் ஆன்மிக வாழ்வின் ரகசியம். * நற்செயல் என்ற நிலத்தை சீர்படுத்தி, கடவுளின் திருநாமம் என்ற விதையை விதையுங்கள். * வாழ்வில் உய்வதற்கு ஒரு வழி தான் இருக்கிறது. கடவுளிடம் பக்தி கொண்டு நல்லவனாக வாழ்வதே. * நான் என்ற எண்ணம் இருக்கும் வரை உன்னால், உன்னை அறிய முடியாது. * எல்லாம் கடவுள் மயமாக இருக்கும் போது அவருக்கு எதைக் காணிக்கையாக்கினாலும் பெருமை உண்டாகாது. * யுகம் யுகமாக ஆராய்ந்தாலும் சரி யாராலும் கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது. * உள்ளத்தில் மவுனம் இல்லாவிட்டால், வெளியுலகில் ஊமையாக இருந்தாலும் மனம் அமைதி பெறாது. * உலகிலுள்ள பணம் முழுவதையும் செலவழித்தாலும் திருப்தியை விலைக்கு வாங்க முடியாது. * மனம் கடவுளிடம் தஞ்சம் அடையாத வரை உலக ஆசைகளில் இருந்து விடுபட முடியாது. * அதிகாலையில் நடத்தும் பிரார்த்தனை, செயல்பாடுகளுக்கு ஆற்றல் அதிகம்.