தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை யிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் திருச்சிற்றம்பலம் வயல்வெளியில் தனி இடத்தில் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் உள்ளது. இவரது செவியில் உள்ள துவாரங்களில் நமது வேண்டுதல்களை சொல்லி வைக்கப்படும் பூக்களை, இந்த விநாயகர் இழுத்துக்கொண்டால், நமது வேண்டுதல் நிறைவேறும். இவரை ‘பூ விழுங்கி விநாயகர்’ என்று அழைக்கின்றனர்.