பதிவு செய்த நாள்
20
அக்
2018
02:10
ராமநாதபுரம்: ராமநாதபுரம், ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த அம்மன் அம்புவிடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோயிலில் தசரா திருவிழா அக்., 9ல் துவங்குகியது. தினமும் இரவு அம்மன் பல்வேறு அலங் காரத்தில் பல வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வீதி உலா நடந்தது. மாலையில் பரதம், ஆன்மிக சொற்பொழிவு, கிராமிய நடனம், பொம்மலாட்டம், குத்துவிளக்கு பூஜைகள் நடந்தது. விஜயதசமி நாளான நேற்று (அக்., 19ல்) இரவு 7:00 மணிக்கு தங்க சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது.
பின் வாண வேடிக்கைகள் நடந்தது. ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத் திரி விழா அக்., 9ல் படி இறங்குதல் பூஜையுடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், மதியம் 12:00 மணிக்கு தீபாராதனை, மாலை கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று (அக்., 19ல்) காலை 10:00 மணிக்கு விஜயதசமி பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்பாள் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்புல்லாணி: ஆதி ஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் நவராத் திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு விசேஷ திருமஞ்சனம் ஆராதனைகள் நடந்தன.
கோயில் கொலுவின் முன் பஜனை, பிரபந்த பாடல்கள் பாடப்பட்டன. நேற்று அக்., 19ல் காலை 9:30 மணியளவில் நான்கு ரத வீதிகளில் குதிரை வாகனத்தில் ஆதிஜெக நாதர் உலாவந்தார். பின்னர் கோயில் பட்டாச்சாரியார் மூலம் நான்கு திசைகளை நோக்கி அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது.
உத்திரகோசமங்கை: மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா நடந்தது. உற்ஸவர் சந்திரசேகரர் வில் அம்புடன் யானை வாகனத்தில் எழுந்த ருளி, வேட்டை மண்டபத்தின் முன்பு காலை 9:00 மணிக்கு அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது. குருக்கள் நாலா புறமும் அம்பு எய்தார்.
ராமநாதபுரத்தில் மகர் நோன்பு திடலில் இரவு நடந்த திருவிழாவிலும் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட அம்புகள் ராஜராஜேஸ்வரி அம்மன் மூலம் எய்யப்படும். ஏற்பாடுகளை ராம நாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
கடலாடி: மாரியூர் அருகே பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம் மன் கோயிலில் நவராத் திரி விழா நடந்தது. 10 நாட்களாக தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தனர்.
நிறைவுநாளான நேற்று (அக்., 19ல்) மாலை 4:00 மணியளவில் அம்மன், மகிஷா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள வன்னிமரத்தினை 21 முறை சுற்றி வலம் வந்தனர்.பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.