Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி அருகே ஆயக்குடியில் பாழான ... திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பிரமாண்ட தேர் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம், உத்தரகோசமங்கை, கடலாடியில் விஜயதசமி
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம், உத்தரகோசமங்கை, கடலாடியில் விஜயதசமி

பதிவு செய்த நாள்

20 அக்
2018
02:10

ராமநாதபுரம்: ராமநாதபுரம், ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த அம்மன் அம்புவிடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கோயிலில் தசரா திருவிழா அக்., 9ல் துவங்குகியது. தினமும் இரவு அம்மன் பல்வேறு அலங் காரத்தில் பல வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வீதி உலா நடந்தது. மாலையில் பரதம், ஆன்மிக சொற்பொழிவு, கிராமிய நடனம், பொம்மலாட்டம், குத்துவிளக்கு பூஜைகள் நடந்தது. விஜயதசமி நாளான நேற்று (அக்., 19ல்) இரவு 7:00 மணிக்கு தங்க சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது.

பின் வாண வேடிக்கைகள் நடந்தது. ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத் திரி விழா அக்., 9ல் படி இறங்குதல் பூஜையுடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், மதியம் 12:00 மணிக்கு தீபாராதனை, மாலை கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று (அக்., 19ல்) காலை 10:00 மணிக்கு விஜயதசமி பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்பாள் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்புல்லாணி: ஆதி ஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் நவராத் திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு விசேஷ திருமஞ்சனம் ஆராதனைகள் நடந்தன.

கோயில் கொலுவின் முன் பஜனை, பிரபந்த பாடல்கள் பாடப்பட்டன. நேற்று அக்., 19ல் காலை 9:30 மணியளவில் நான்கு ரத வீதிகளில் குதிரை வாகனத்தில் ஆதிஜெக நாதர் உலாவந்தார். பின்னர் கோயில் பட்டாச்சாரியார் மூலம் நான்கு திசைகளை நோக்கி அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது.

உத்திரகோசமங்கை: மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா நடந்தது. உற்ஸவர் சந்திரசேகரர் வில் அம்புடன் யானை வாகனத்தில் எழுந்த ருளி, வேட்டை மண்டபத்தின் முன்பு காலை 9:00 மணிக்கு அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது. குருக்கள் நாலா புறமும் அம்பு எய்தார்.

ராமநாதபுரத்தில் மகர் நோன்பு திடலில் இரவு நடந்த திருவிழாவிலும் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட அம்புகள் ராஜராஜேஸ்வரி அம்மன் மூலம் எய்யப்படும். ஏற்பாடுகளை ராம நாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

கடலாடி: மாரியூர் அருகே பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம் மன் கோயிலில் நவராத் திரி விழா நடந்தது. 10 நாட்களாக தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தனர்.

நிறைவுநாளான நேற்று (அக்., 19ல்) மாலை 4:00 மணியளவில் அம்மன், மகிஷா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள வன்னிமரத்தினை 21 முறை சுற்றி வலம் வந்தனர்.பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar