பதிவு செய்த நாள்
23
அக்
2018
12:10
சபரிமலை:சபரிமலை சன்னிதானத்துக்கு மாடலிங் அழகி ரஹானா பாத்திமாவை பாது காப்பாக அழைத்து சென்ற ஐ.ஜி., ஸ்ரீஜித் நேற்று (அக்.,22ல்) கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது ஐயப்பனை பார்த்து மனமுருகி கண்ணீர் சிந்தினார்.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும், பக்தர்களின் வேண்டு கோளை மதிக்காமல் அதை நடைமுறைப்படுத்துவதில் கம்யூ., அரசு காட்டிய வேகமும் ஐப்பசி மாத பூஜையை அலங்கோலப்படுத்தியது.
நடைதிறந்தது முதல் நேற்று வரை விளம்பரம் தேடி பெண்கள் சிலர் வருகை, பக்தர்கள் எதிர்ப்பு, நிலக்கல்லில் கல்வீச்சு, கைது என சம்பவங்கள் அரங்கேறின.
சபரிமலையில் இதுவரை லத்தி இல்லால் பணிபுரிந்த போலீசார், இந்த முறை கையில் வைத்துக் கொண்டு வலம் வந்தனர்.கோயிலுக்கு வந்த மாடலிங் அழகி ரஹானா பாத்திமாவை 180 போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அவரை அழைத்து சென்ற போலீசாருக்கு தலைமை வகித்தவர் ஐ.ஜி., ஸ்ரீஜித். பக்தர்களின் எதிர்ப்பை யும் மீறி சன்னிதானம் நடைப்பந்தல் வரை அழைத்து சென்றார்.
"இதை கண்டித்து கோயில் நடையை அடைப்பேன், என தந்திரி கண்டரரு ராஜீவரரு எச்சரித் ததால் ரஹானா பாத்திமாவை போலீசார் திரும்ப அழைத்துச் சென்றனர்.
கண்ணீர் வடித்த ஐ.ஜி.,இந்நிலையில் ஐ.ஜி., ஸ்ரீஜித் நேற்று 22 ல்சன்னி தானம் வந்தார். இறுக்கமான முகத்துடன் சன்னிதானத்தின் முன்புறம் வந்து கூப்பிய கைகளுடன் ஐயப்பன் முன் நின்றார். அப்போது அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. கடந்த ஆறு நாட்களாக நடை திறந்திருந்தும் நேற்று 22 ல் தான் அவர் தரிசனத்துக்காக வந்தார். ஐயப்பனுக்கு சவால் விடுவோர் இறுதியில் சரணாகதி அடைய வேண்டியதுதான் என அங்கிருந்த பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.