நம் வீட்டில் திருமணம், புதுவீடு புகுதல்... இவற்றையெல்லாம் ஆடம்பரமாக கொண்டாட வேண்டுமென நினைக்கிறோம். ஆடம்பரமாக நடந்தால் தான், மற்றவர்கள் மதிப்பார்கள் என்று பலரும் எண்ணுகிறார்கள். பைபிளில் யோவான் 5ம் அதிகாரத்தில், “ஊர் முழுக்க பண்டிகை கொண்டாடப்பட்ட அந்த வேளையிலும், இயேசு நாதர் பெதஸ்தா குளத்தருகே அமர்ந்து நோயாளியைக் குணப்படுத்திக் கொண்டிருந்தார்,” என சொல்லப்பட்டிருக்கிறது. விழாக்கள் வருவதே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை கர்த்தரின் இந்தச் செயல் நமக்கு உணர்த்துகிறது. கிறிஸ்துமஸ், ஈஸ்டர் என்றெல்லாம் பல திருநாட்கள் வருகிறது... அன்றெல்லாம், நாம் எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்தோம் என எண்ணிப் பார்க்கவேண்டும். அதுபோல, நம் இல்ல விழாக்களில் விருந்துண்டவர் களில் எத்தனை ஏழைகள் இருந்தனர் என சிந்தியுங்கள். ஏழைகள் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காகவே விழாக்களை நடத்த வேண்டும். ஆடம்பரமாய் செலவழியும் பணத்தை ஏழை இல்லங் களுக்குக் கொடுங்கள். விழாக்களை எளிமையாக்கி கர்த்தரின் அன்பைப் பெறுங்கள்.