பதிவு செய்த நாள்
29
அக்
2018
12:10
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஒன்பது நாட்கள் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம், நேற்று முன்தினம் (அக்., 27ல்) துவங்கியது.
உற்சவத்தை முன்னிட்டு, ரெங்கநாதர் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, ரெங்கநாதர் கோவிலில் மூன்றாவது சுற்றான குலசேகரன் திருச்சுற்றில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 7:15 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாதர் காட்சியளித்தார். உற்சவத்தில், ஏழாம் நாள் விழாவின் போது, நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி, நவ., 4ல், தீர்த்தவாரி நடைபெறும். அதுவரை, விஸ்வரூப தரிசனம் ரத்து செய்யப்படும்.